1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 நவம்பர் 2021 (12:51 IST)

சென்னை மெரீனாவுக்கு செல்ல தடை: மீண்டும் மாணவர்கள் போராட்டமா?

சென்னை மெரீனா கடற்கரைக்கு  செல்ல காவல்துறை தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டு ஆஃப்லைனில் தேர்தல் தேர்வு நடத்துவது நியாயமில்லை என்று மாணவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்
 
இந்த நிலையில் ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை மெரினாவில் மாணவர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது
 
இதனை அடுத்து இன்று சென்னை மெரினாவில் பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை என காவல்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது