1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 29 டிசம்பர் 2023 (07:22 IST)

அரசியல் தலைவர்களுக்கு கண்டம்.. அன்றே சொன்னது பஞ்சாங்கம்..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலமான நிலையில் இந்த வருடத்தில் மூத்த அரசியல் தலைவர்களுக்கு கண்டம் என்று தமிழ் பஞ்சாங்கத்தில் அன்றே கணிக்கப்பட்டுள்ளது.  

முன்னோர்களால் கணித்து எழுதப்பட்ட பஞ்சாங்கத்தில் சொன்னது போலவே பல சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஏற்கனவே பஞ்சாங்கத்தில் மழை வெள்ளம் ஏற்படும் என்றும் டிசம்பர் மாதம் அதிக மழை பெய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது போல் மழை பெய்தது.

அதேபோல் பஞ்சாங்கத்தில்  அரசியல் தலைவர்களுக்கு குறிப்பாக மூத்த வயதுடைய அரசியல் தலைவர்களுக்கு கண்டம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு சில அரசியல் தலைவர்கள் உடல்நல குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களும் உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டு நேற்று காலை மரணம் அடைந்தார்.

பழம்பெரும் அரசியல்வாதிகளுக்கு உடல் நலம் பாதிக்கும் என்றும் அரசியல் குழப்பம் ஏற்படும் என்றும் ஏற்கனவே பஞ்சாங்கத்தில் கணித்து எழுதப்பட்டது போலவே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva