1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 3 அக்டோபர் 2020 (10:49 IST)

பெயரை மாற்றிக்கொண்ட மக்களவை உறுப்பினர் ரவீந்தரநாத் ! நியுமராலஜிதான் காரணமா?

பெயரை மாற்றிக்கொண்ட மக்களவை உறுப்பினர் ரவீந்தரநாத் ! நியுமராலஜிதான் காரணமா?
தேனி மக்களவை உறுப்பினரும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகனுமாகிய ஓ பி ரவீந்தரநாத் குமார் தன் பெயரை நியுமராலஜி படி மாற்றிக்கொண்டுள்ளார்.

தேனி மாவட்டத்தின் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஓ பி ரவீந்தரநாத். தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பாக டெல்லிக்கு சென்றிருக்கும் ஒரே ஒரு மக்களவை உறுப்பினர் இவர்தான். பாஜக அரசு எந்த மசோதா கொண்டு வந்தாலும் தமிழ்நாட்டில் இருந்து கிடைக்கும் ஒரே ஒரு ஆதரவுக் குரல் இவருடையதுதான்.

பெயரை மாற்றிக்கொண்ட மக்களவை உறுப்பினர் ரவீந்தரநாத் ! நியுமராலஜிதான் காரணமா?

இந்நிலையில் இவர் தன் பெயரை இப்போது கெசட்டில் ஓ பி ரவீந்தரநாத் என மாற்றிக்கொண்டுள்ளார். அவரது முழுப் பெயர் ரவீந்தரநாத் குமார் ஆகும். அதுபோல இதுவரை ஆங்கிலத்தில் Raveendranath என எழுதி வந்தவர் இப்போது Ravindranath என மாற்றிக்கொண்டுள்ளார். இந்த மாற்றத்துக்கு நியுமராலஜிதான் காரணம் என சொல்லப்படுகிறது.