1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 18 செப்டம்பர் 2017 (22:29 IST)

18 எம்.எல்.ஏக்களும் மீண்டும் பதவியை பெற ஒரே வழி இதுதான்:

அதிமுகவின் தினகரன் அணியை சேர்ந்த 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுவிட்ட நிலையில் தற்போது அவர்களுக்கு மீண்டும் எம்.எல்.ஏ பதவி கிடைக்க ஒரே வழி நீதிமன்றம் தான்



 
 
சென்னை உயர்நீதிமன்றம் சபாநாயகரின் முடிவு செல்லாது என்று அறிவிக்க வேண்டும். அப்படியே அறிவித்தாலும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த 18 எம்.எல்.ஏக்களும் கொறடா சொல்படி வாக்களிக்க வேண்டும். அதாவது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்
 
ஒருவேளை அரசுக்கு எதிராக வாக்களித்தால் மீண்டும் எம்.எல்.ஏ பதவி போய்விடும். இந்த நிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் ஒன்று தகுதிநீக்கம் அல்லது எடப்பாடி அணிக்கு ஆதரவு என்ற நிலையை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் தினகரன் அணி வலுவிழந்து காணப்படுவதாகவும், இனி தினகரனுக்கு அரசியல் என்பது அஸ்தமம்தான் என்றும் கூறப்படுகிறது.