தொடர்புடைய செய்திகள்
- தீபாவளிக்கு முன் அறிவிப்பு, திருச்சியில் மாநாடு: ரஜினியின் மெகா பிளான்
- தீபாவளிக்கு முன் அறிவிப்பு, திருச்சியில் மாநாடு: ரஜினியின் மெகா பிளான்
- மீண்டும் சொதப்பிய திருச்சி-துபாய் விமானம்: 114 பயணிகள் உயிர்தப்பினர்
- திருச்சியில் இருந்து புறப்பட்ட விமானம் சுவற்றில் மோதி சேதம்...
- திருச்சி விமான நிலையத்தில் சுற்றுச்சுவரை உடைத்து கொண்டு கிளம்பிய விமானத்தால் பரபரப்பு
ஒரு கோடி கொள்ளை: திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்
திருச்சியில் பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் ஒரு கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் தலைமை தபால் நிலையம் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் ஆம்னி பேருந்தில் இருந்து இறங்கினர். அப்போது அங்கே காரில் வந்த மர்ம கும்பல் நிதி ஊழியர்களிடம் இருந்த ஒரு கோடி ரூபாயை கொள்ளையடித்து தப்பிச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து, கண்டோன்மென்ட் போலீஸார் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். திருச்சியில் பட்டப்பகலில் நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
