விஜயகாந்த் தலைமையிலான அக்கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில் இன்று மீண்டும் அதிமுகவுடன் அக்கட்சி தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்தது. ஆனால் இப்பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன்...