தொடர்புடைய செய்திகள்
- நீட் தேர்வு: இந்திய அளவில் முதலிடம் பிடித்த ராஜஸ்தான் மாணவி!
- சவுக்கு சங்கர் தற்கொலை முயற்சியா? அவரே பதிவு செய்த டுவிட்!
- தினேஷ் கார்த்திக்கிற்கு ஆடும் 11-ல் வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?
- ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.75,000 இழப்பு: கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி
- தோல்விக்கு என்ன காரணம்… கேப்டன் ரோஹித் ஷர்மாவின் பதில்!
நீட் தேர்வில் தோல்வி; திருவள்ளூர் மாணவி தூக்கிட்டு தற்கொலை
நீட் தேர்வு முடிவுகள் நேற்றிரவு வெளியான நிலையில் இன்று காலை நீட் தேர்வில் தோல்வி அடைந்த திருவள்ளூர் மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவ மாணவிகளில் சிலர் தற்கொலை செய்து வருகின்றனர் என்றும் அதனால் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
இந்த நிலையில் ஜூலை 17ஆம் தேதி நடந்த நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் இன்று காலை திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த ஸ்வேதா என்ற மாணவி தேர்வில் தோல்வி அடைந்ததால் அதிர்ச்சி அடைந்தார்
இதனை அடுத்து அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
அடுத்த கட்டுரையில்
