1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 10 ஆகஸ்ட் 2016 (19:22 IST)

அழகான என் மனைவி வேண்டுமா? விளம்பரம் செய்யும் கணவன்

அழகான என் மனைவி வேண்டுமா? விளம்பரம் செய்யும் கணவன்

அழகான என் மனைவி வேண்டுமா? இவளை அனுபவிக்கலாம் என்று கணவன், தனது மனைவியின் புகைப்படத்தை போட்டு ஆன்லைனில் விளம்பரம் செய்து வருகிறார்.


 

 
தனியாக இருக்கும் ஆண்கள் மற்றும் பெண் உறவுகளை ஆன்லைனில் தேடும் ஆண்களை குறிவைத்து கணவன், மனைவி இரண்டு பேரும் கூட்டு சேர்ந்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்து வந்துள்ளனர்.
 
கணவன், தனது மனைவியின் புகைப்படத்தை இணையதளத்தில் போட்டு, இவள் என் அழகான மனைவி, எனக்கு உடல்நிலை சரியில்லை, இவளை அனுபவிக்கலாம் என்று விளம்பரம் செய்துள்ளார்.
 
விருகம்பாக்கத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அந்த விளம்பரத்தை பார்த்து அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆசைப்பட்டு தொலைப்பேசி மூலம் தொடர்ப்பு கொண்டுள்ளார். அப்போது அந்த பெண் வசீகரமாக பேசி அரைமணி நேரத்தில் அந்த இளைஞரின் வீட்டுக்கு கணவன், மனைவி இருவரும் சென்றுள்ளனர்.
 
அந்த இளைஞனின் வீட்டுக்கு சென்று தலைவலிக்குது ஒரு காபி போட்டு தா என்று அந்த பெண் கேட்க, அவன் எனக்கு காபி போட தெரியாது என்று கூறியுள்ளான். உடனே அந்த பெண்ணின் கணவன், இருவரும் வெளியே சென்று கடையில் காபி சாப்பிட்டு வாங்க, நான் வீட்டில் டிவி பார்த்துக்கிட்டு இருக்கேன் என்று கூறியுள்ளார்.
 
மனைவியை அந்த இளைஞனுடன் வெளியே அனுப்பி வைத்துவிட்டு, கணவன் வீட்டில் இருந்த தங்க நகைகள், காசு போன்றவற்றை சுருட்டி பார்சல் செய்துவிட்டு சகஜமாக டிவி பார்த்துக்கொண்டு இருந்துள்ளார்.
 
வெளியே சென்ற இருவரும் வீடு திரும்பியவுடன், அந்த இளைஞன் பெண்ணை படுக்கை அறைக்கு அழைத்துள்ளான். ஆனால் அவள் காரனம் கூறிவிட்டு அங்கிருந்து கணவனுடன் பறந்துவிட்டாள். 
 
சிறிது நேரம் கழித்தே அந்த இளைஞன் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து அவைனை ஏமாற்றியதை உணர்ந்துள்ளான். 
 
பெற்றோர்கள் வீடு திரும்பியவுடன் வீட்டில் திருட்டு நடந்தது என்று சமாளித்துள்ளான். பின்னர் இந்த செய்தி காவல் துறையினருக்கு செல்ல, அவர்கள் அந்த இளைஞனிடம் விசாரித்துள்ளனர். அதில் அவன் மாட்டிக் கொண்டு உண்மையை கூறியுள்ளான்.
 
பின்னர் காவல் துறையினர் அந்த கணவனை கைது செய்தனர். மனைவியை தேடிக் கொண்டிருக்கின்றனர். கைது செய்தபவரிடம் விசாரணை நடத்தியதில் இதுபோன்று ஏராளமான இளைஞர்களை ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.