தொடர்புடைய செய்திகள்
- இன்று ஒருநாள் போதாது, 3 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு தேவை: அன்புமணி
- மார்ச் 31 ஆம் தேதி வரை அரசு, தனியார் நூலகங்கள் மூடல் !
- கொரோனா வைரஸ் பீதி : கோழிக்கறி விற்பனைக்காக ... சில்லி சிக்கன் இலவசம் !
- என்னடா கோழிக்கறிக்கு வந்த சோதனை! ஓசியில் கொடுத்தாலும் மறுக்கும் மக்கள்!
- மனிதநேயம் இன்னும் இறக்கவில்லை...வாகனம் விபத்துக்குள்ளானபோது ... வைரலாகும் வீடியோ
சுய ஊரடங்கு உத்தரவிலும் வெளுத்து வாங்கும் மட்டன் வியாபாரம்!
வெளுத்து வாங்கும் மட்டன் வியாபாரம்
கொரோனா வைரஸ் பாதுகாப்பை முன்னிட்டு நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வரும் நிலையில் சுய ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மட்டன் கடைகளில் கூட்டம் அலைமோதியதாக செய்திகள் வெளிவந்துள்ளது,
பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டன் கடைகளில் வியாபாரம் ஜோராக இருக்கும். அதிலும் இன்று சுய ஊரடங்கு உத்தரவு என்பதால் அனைவரும் மட்டன் எடுத்து சாப்பிட முடிவு செய்து காலை முதல் மட்டன் கடைகளில் குவிந்து வருகின்றனர். கோழிக்கறி சாப்பிட்டால் கொரோனா பரவும் என்ற வதந்தி காரணமாக மட்டன் வியாபாரம் மட்டுமே அமோகமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் காலை 7 மணிக்கு மேலும் மட்டன் கடைகளில் கூட்டம் அதிகமானதை அடுத்து போலீசார் அந்த கடைகளை மூட உத்தரவிட்டதால் வேறு வழியின்றி மட்டன் கடைக்காரர்கள் கடைகளை மூடி வருகின்றனர்.
மேலும் இன்று சுய ஊரடங்கு உத்தரவு என்பதால் நேற்று மாலையே காய்கறி, மளிகைப்பொருட்களை மக்கள் மொத்தமாக வாங்கி வைத்ததால் நேற்று நள்ளிரவு வரை மளிகை, காய்கறி கடைகளில் அமோகமாக வியாபாரம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
