திங்கள், 23 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: சனி, 14 டிசம்பர் 2019 (20:48 IST)

தாயைப் போன்று உடையணிந்து காரை ஓட்டிக் காட்டிய மகன்...

பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு இளைஞர், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக, தாயை போன்று உடையணிந்து ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பிரேசில் நாட்டில், ஹொய்டார் என்ற ஸைவ் என்ற இளைஞரின் தாய், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக தொடர்ந்து மூன்று முறை தோல்வி அடைந்தார் அப்பெண். அதனால் தன் தாயின் ஆசையை நிறைவேற்ற நினைத்த மகன், தன் தாயைப் போன்று உருமாறினார். 

பின்னர், அவர், கார் ஓட்டச் சென்ற போது, அவரது புகைப்படத்திற்கும், தற்போது உள்ளவருக்கும் வேறுபாடு தெரிந்ததால்,அவரிடம் விசாரித்தனர்.
 
அதில், ஆள்மாறாட்டம் செய்ததை ஒப்புக்கொண்டார். அதன்பின்பு அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.