1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (14:19 IST)

’கடவுளின் பிரநிதிகள் என கூறும் ஆசாமிகளிடம் பெண்கள் ஏமாற வேண்டாம்’ - கே.பாக்யராஜ்

கடவுளின் பிரநிதிகள் என தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஆசாமிகளிடம் பெண்கள் ஏமாற வேண்டாம் என்று திரைப்பட இயக்குநரும், நடிகருமான கே.பாக்கியராஜ் கூறியுள்ளார்.
 

 
ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி சிந்தனை அரங்கத்தில் கே.பாக்கியராஜ் அவர்கள் கலந்து கொண்டார்.
 
அப்போது பேசிய பாக்யராஜ், ”நிறைய பேரு இன்னமும் சாமி, சாமி என சொல்லிக்கிட்டு இருக்கிறார்கள். நம்ம ஜனங்கள் புரிந்ஹ்டு கொள்ளாமல் காலில் விழுந்துகொண்டு இருக்கிறார்கள். பிறகு அவர்களிடம் சிக்கிக்கொண்டு, கொஞ்ச நாள் கழித்து இந்த சாமி அப்படி ஏமாத்தினார். அந்த சாமி இப்படி ஏமாத்தினார் என்கின்றனர்.
 
நமது தாய்மார்கள் இந்த சாமி விஷயத்தில மட்டும் இன்னும் ஏமாந்து கொண்டே இருக்கிறார்கள். தயவு செய்து கடவுளின் பிரநிதிகள் என தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஆசாமிகளிடம் பெண்கள் ஏமாந்துவிடாமல் விழுப்புடன் இருக்க வேண்டும், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.