1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 30 டிசம்பர் 2023 (12:34 IST)

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பைக் ரேஸ் நடப்பதை தடுக்க கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு!

Chennai
நாளை இரவு முதல் 2024 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டத்தொடங்கும். எனவே இதற்கு அனைவரும் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில், புத்தாண்டையொட்டி சென்னையில், கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் சலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் இருசக்கர வாகன பந்தயம் நடப்பதை தடுக்க 2 கண்காணிப்பு சோதனைகுழுக்கம் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.

மேலும், புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அதிகமாக மக்கள் கூடும் கடற்கரை, வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட இடங்களில் 18000போலீஸார் மற்றும் 100 ஊர்காவல் படையினர் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனர்.

சென்னையில் 420 இடங்களில் வாகன தணிக்கை செய்யப்படவுள்ளது. வாகன ரேஸ்  நடப்பதைத் தடுக்க 25 கண்காணிப்பு குழுக்களை அமைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.