செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 13 மார்ச் 2019 (17:24 IST)

மோடி வெறுப்பாக உள்ளார் ! அன்பினால் கட்டி அணைத்தேன் - ராகுல் காந்தி

தமிழகம் வந்துள்ள ராகுல் காந்தி இன்று சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவிகளிடையே கலந்துரையாடலில் கலந்து கொண்டார். அப்போது மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னார். 
அப்போது ஒரு மாணவி நாடாளுமன்றத்தில் மோடியை கட்டி அணைத்தது ஏன் என்று கேள்வி எழுபினார்.  

அதற்கு ராகுல் கூறியதவது :
 
’’அனைத்து மதங்களும் அன்பை தான் போதிக்கின்றன. அதனால் மோடி மீது என் அன்பை காட்டினேன். ஆனால் மோடி வெறுப்பாக இருக்கிறார். எனவேதான் அன்பு என்னிடமிருந்து தொடங்கட்டும் என்ற எண்ணத்தில் அவரை கட்டிப் பிடித்து அணைத்தேன் ’’இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.