1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 11 அக்டோபர் 2022 (15:43 IST)

பொறியியல் மாணவர் சேர்க்கையில் இந்தாண்டு காலியிடங்கள் இருக்காது: அமைச்சர் பொன்முடி

Ponmudi
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இந்த ஆண்டு காலியிடங்கள் இருக்காது என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
 
ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்கள் அதிகம் இருந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இந்த ஆண்டு காலியிடங்கள் இருக்காது என்ற உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார் 
 
இந்த ஆண்டு 1.10 லட்சம் பேருக்கு அக்டோபர் 13ஆம் தேதி மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது என்றும் இந்த ஆண்டு ஐடி, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்பட பல பிரிவுகளில் மாணவர்கள் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
எனவே  இந்த ஆண்டு நிச்சயமாக காலியிடங்கள் இருக்காது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்
 

Edited by Mahendran