1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (13:42 IST)

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கடன் அதிகமானது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

palanivel
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான் இந்தியாவின் கடன் அதிகமானது என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார் 
 
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் தமிழ்நாட்டின் கடன் அதிகமானது குறித்து குற்றம் காட்டி இருந்தார் 
 
 கடனை ரூபாயில் கணக்கிடாமல் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதாவது ஜிடிபியில் தான் கணக்கிட வேண்டும். அவ்வாறு கணக்கு பார்த்தால் தமிழ்நாடு அரசு கடன் ஜிடிபி யில் 27% தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார். 
 
ஆனால் மத்திய அரசின் கடன் ஜிடிபி யில் 60 சதவீதம் இருக்கிறது என்றும் பாஜக ஆட்சிக்கு வந்த போது தான் கடன் அதிகமாகியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Siva