1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 15 டிசம்பர் 2022 (11:55 IST)

அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு.. 4 மருத்துவர்கள் சஸ்பெண்ட்

subramanian
அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் திடீரென ஆய்வு செய்ததில் உரிய நேரத்தில் பணிக்கு வராமல் இருந்த 4 மருத்துவர்களை அவர் சஸ்பெண்ட் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் இன்று மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் திடீர் என ஆய்வு செய்தார்.
 
அப்போது உரிய நேரத்தில் பணிக்கு 4 அரசு மருத்துவர்கள் வரவில்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த 4 மருத்துவர்களையும் அவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்தார்
 
மேலும் மருத்துவமனையை ஆய்வு செய்யாமல் இருந்த மாவட்ட மருத்துவ இணை இயக்குனரையும் பணியிட மாற்றம் செய்தார்/ திடீர் ஆய்வுக்கு பின் அமைச்சர் மா சுப்பிரமணியன் இந்த அதிரடி நடவடிக்கையை மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran