தொடர்புடைய செய்திகள்
- வாட்ஸ் ஆப் வதந்தி - கூகுள் என்ஜினியர் அடித்துக் கொலை
- முதல்வர் பதவி என்பது ரோஜாப் பூ படுக்கை அல்ல: கண்ணீர் விட்ட குமாரசாமி
- வினாடிக்கு 1லட்சம் கனஅடி நீர் திறப்பு! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- பொது மேடையில் கதறி அழுத கர்நாடக முதல்வர் குமாரசாமி
- தமிழகத்திற்கு அதிகரிக்கும் தண்ணீர் வரத்து: காவிரி பிரச்சனைக்கு பிரேக்!!
100 அடியை எட்டியது மேட்டூர் அணையின் நீர்மட்டம்!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளது. கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு 100 அடி நீர்மட்டத்தை எட்டியது.
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு வினாடிக்கு 1 லட்சம் கன அடி உபரி தண்ணீர் திறக்கப்பட்டது.
கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி தண்ணீர் மற்றும் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது.
வினாடிக்கு 1 லட்சம் கன அடி உபரி நீர் திறந்து விடப்படுவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
இந்நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. மேட்டுர் அணை 100 அடியை எட்டுவது இது 64 வது முறையாகும்.
அடுத்த கட்டுரையில்
