1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 17 பிப்ரவரி 2020 (11:58 IST)

நான் வாயத் தொறந்தா எல்லோரும் சூசைட் பண்ணிப்பாங்க – நாம் தமிழர் கூட்டத்தில் மன்சூர் அலிகான் !

நாம் தமிழர் கட்சி சார்பில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக வண்ணாரப்பேட்டையில் நடந்த கூட்டத்தில் பேசிய மன்சூர் அலிகான் அதிரடியாக பல கருத்துகளை தெரிவித்துள்ளார்.

குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக வண்னாரப்பேட்டையில் இஸ்லாமிய மக்கள் நடத்திய போராட்டத்தின் அவர்களைக் கலைக்க போலிசார் தடியடி தாக்குதல் நடத்தியது பரபரப்பை உண்டாக்கியது. போலீஸாரின் அராஜகத்தைக் கண்டித்து தமிழக எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தி இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக நாம் தமிழர் கட்சியும் வண்ணாரப்பேட்டையில் கூட்டத்தை நடத்தியது.

அந்த கூட்டத்தில் அக்கட்சியின் மன்சூர் அலிகான் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் ‘மன்சூரலிகான் வாயை திறந்தாலே, எப்ஐஆர் போட்டுட்டு 10 பேர் வெளியே ரெடியா நிப்பாங்க. ஆனா அதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் கிடையாது. மக்கள் போராட்டத்துல நான் உள்ள புகுந்து எதும் பிரச்சனை ஆகிடக்கூடாதுன்னு பாக்குறேன். இல்லாட்டி நான் வாயை தொறந்தேன்னு வெச்சுக்குங்க, அவனவன் நாண்டுக்கிட்டு செத்துப்போயிடுவான். அங்க இருக்கவங்களுக்கு ஏபிசிடி யே தெரியாது. ஆனா என் ஆர் சி, சி ஏ ஏ-னு இன்னும் நாலு வருஷத்துக்கு இதையேதான் பண்ணிட்டு இருப்பாங்க. அதனால இவங்களை ஒட்டுமொத்தமா துடைச்செறியறதுதான் என்னுடைய வேண்டுகோள். பத்திரிக்கையாளர்கள் ஏதாவது கட்டுரை எழுதி அவர்களை ஒட்டுமொத்தமாக தூக்கி எறியணும்’ எனத் தெரிவித்துள்ளார்.