சாவியை எப்படி எடுக்கலாம்? ; போலீசாரை விலாசிய வாலிபர் - வைரல் வீடியோ
தனது மோட்டார் சைக்கிளின் சாவியை எடுத்துக் கொண்ட போலீசாரை நோக்கி, வாலிபர் ஒருவர் கோபத்துடன் கத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நான் ஏன் நீதிமன்றத்திற்கு வந்து அபராதம் செலுத்த வேண்டும். ஏ.டி.எம்-ல் 2000 ரூபாய்தான் வருகிறது. அதற்கு மேல் என்னை நீதிமன்றம் அபராதம் செலுத்தக்கூறினால் என்னால் எப்படி முடியும்?.பொதுமக்களை போலீசார் அலைக்கழிக்கிறார்கள் என அவர் சத்தம் போட்டு நடு நோட்டில் கத்துகிறார். அவருக்கு எந்த பதிலும் கூறாமல், போக்குவரத்து போலீசார் அங்கிருந்து நழுகின்றனர்.
அதை சில செய்தியாளர்கள் படம் பிடித்துள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.