ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 12 செப்டம்பர் 2020 (08:35 IST)

மீண்டும் ஒரு நீட் தற்கொலை… மதுரை மாணவி விபரீத முடிவு?

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மதுரையைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீட் எனும் மருத்துவ நுழைவுத்தேர்வால் பல கிராமப்புற மற்றும் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவம் படிக்கும் கனவும் பலியாகி வருகிறது. இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து போராட்டங்களை நடத்தினாலும், மத்திய அரசு உறுதியாக இருந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல மாணவர்களின் உயிர் பலியாகியுள்ளது.

சமீபத்தில் அரியலூர் மாவட்டம் எலந்தகுழி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாளை நீட் தேர்வு நடக்க உள்ள நிலையில் மதுரையைச் சேர்ந்த துர்கா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் ஏற்கனவே நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார். அதனால் இந்த ஆண்டு மிகுந்த பயத்துடனே படித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று படித்துக் கொண்டிருந்த போது தனது அறையிலேயே தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.