வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 26 ஜூன் 2020 (08:57 IST)

சென்னை கோயம்பேடு போல மதுரைக்கு பரவை மார்க்கெட்!? – கொரோனா சோதனை தீவிரம்!

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் சென்னையை போலவே மதுரையிலும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் பல கட்ட ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. சென்னையில் கடந்த மாதத்தில் கோயம்பேடு மார்க்கெட் ஹாட்ஸ்பாட் பகுதியால் கொரோனா அதிகரிப்பதாக கண்டறியப்பட்ட நிலையில் மார்க்கெட் மூடப்பட்டது.

இந்நிலையில் தற்போது மதுரையிலும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. மதுரை பரவை மார்க்கெட் தொடர்புடைய 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பரவை மார்க்கெட்டில் உள்ள மற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டோடு தொடர்புடைய 1,500 பேருக்கு கொரோனா சோதனை செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.