1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 16 ஆகஸ்ட் 2023 (12:44 IST)

தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராக கோஷம்.. மாணவி லூயிஸ் சோபியா மீதான வழக்கு ரத்து..!

தற்போது புதுவை மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக இருந்த போது தூத்துக்குடிக்கு சென்றிருந்தார். 
அப்போது அதே விமானத்தில் வந்த சோபியா என்ற மாணவி பாஜகவுக்கு எதிராகவும் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராகவும் கோஷமிட்டார். 
 
இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்த நிலையில் தற்போது  இந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
தூத்துக்குடி விமானநிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராக கோஷம் எழுப்பிய, மாணவி லூயிஸ் சோபியா மீதான வழக்கை ரத்து செய்யப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
Edited by Mahendran