1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 13 ஜூலை 2018 (13:22 IST)

சொல்வதை செய்பவர்தான் செல்லூரார் - வைரல் புகைப்படம்

மதுரை மாநகரம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் போல் மாற்றப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது கடும் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

 
வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க அணையின் நீர்ப்பரப்பை தெர்மாக்கொல் கொண்டு மூடிய அமைச்சர் செல்லூர் ராஜூவின் செய்கை இந்திய அளவில் கிண்டலடிக்கப்பட்டது. 
 
அது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் மதுரை வந்த செல்லூர் ராஜூ “மதுரையில் தொழில் முதலீட்டாளர்கள் வரவுள்ளனர். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைப் போல் உலகத்தரம் வாய்ந்த பூங்காங்கள் வைகை நதி கரையோரம் அமைய இருக்கிறது. எனவே, மதுரை விரைவில் சிட்னி நகரம் போல் மாறப்போகிறது” எனப் பேசினார்.

 
இந்த விவகாரமும் சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்கப்பட்டது. பல மீம்ஸ்களும் உலா வந்தது.
 
இந்நிலையில், சிட்னியை போல் மதுரை மாறிவிட்டது போல் ஒரு மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.