1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 17 டிசம்பர் 2021 (16:31 IST)

அதிகாரிகளின் சட்டையை கழட்டுவோம்- முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்

கடந்த ஏப்ரல் மாதல் தமிழகத்தில் தேர்தல் நடந்தது. இதில், ஸ்டாலின் தலைமையிலான திமுக பெரும்பான்மையை இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. ஸ்டாலின் முதல்வர் பொறுபேற்று ஆட்சி நடத்தி வருகிறார்.

எதிர்க்கட்சியான அதிமுக ஆளும் திமுக அரசின் மீது விமர்சனங்களும் குற்றச்சாட்டும் கூறி வருகிறது.

இந்நிலையில், ஏற்கனவே முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதேபோல், நேற்று முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீட்டிலும் அலுவலகத்திலும் சோதனை நடத்தினர். இதில், அவர் கிரிப்டோ கரன்சியின் முதலிட்ய் செய்து வைத்துள்ளதைக் கண்டு பிடித்தனர்.

இது தமிழகத்தில் பேசும் பொருளாக மாறியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர். மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் திமுக அரசின் நடவடிக்கை எதிப்பும், கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று விழுப்புரத்தில் நடந்த அதிமுக ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் , நாங்கள் ஆட்சிக்கு வந்தால், லஞ்ச ஒழிப்புத்துறையினர் வீடுகளில் சோதனையிடுவோம்.அதிகாரிகளின் சட்டையை கழ்ற்றுவோம் என தெரிவித்துள்ளார்.