1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 24 அக்டோபர் 2021 (09:32 IST)

கொடைக்கானல்: 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு

கொடைக்கானல் நெடுஞ்சாலையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதால் மக்கள் அவதி. 

 
தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாக பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் 25 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  
 
இந்நிலையில் கொடைக்கானலில் பெய்த கனமழை காரணமாக அடுக்கம் நெடுஞ்சாலையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மண்சரிவு ஏற்பட்டு பல்வேறு இடங்களில் சாலை பெய்ந்துள்ளதால் நகருக்குள் செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.