1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 24 ஏப்ரல் 2021 (22:29 IST)

நாளை 'அம்மா உணவகம்' செயல்படுமா ? அரசு முக்கிய அறிவிப்பு

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவிவருகிறது. இந்தியாவிலும் இந்தத் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதைக்குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

கொரொனா பரவலைக் கடுப்படுத்த மக்கள் கூடும் பொது இடங்களில் அரசு பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரொனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 ன் கீழ் 26-04-21அதிகாலை 4 மணிக்கு முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

இந்நிலையில், சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் வழக்கம் போலச் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால் வழக்கம்போல சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் செயல்படுமா எனக் கேள்வி எழுந்தது.
இந்நிலையில் நாளை சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.