1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 24 மார்ச் 2022 (12:01 IST)

கேட்டது ரூ.6230.45 கோடி, கிடைத்தது ரூ.352.85 கோடி: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

தமிழகத்திற்கு பேரிடர்  நிதியாக ரூபாய் 6230.45 கோடி கேட்ட நிலையில் மத்திய அரசு ரூபாய் 352.85 கோடி தான் தந்துள்ளது என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் சட்டமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். 
 
தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிதியாக மத்திய அரசிடமிருந்து ரூ.6230.45  கோடி கேட்டது என்றும் ஆனால் மத்திய அரசால்  ரூ.352.85  கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் ஏற்பட்ட கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிதி வேண்டுமென தமிழக அரசால் கேட்கப்பட்டதற்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது