திங்கள், 29 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 10 பிப்ரவரி 2021 (12:27 IST)

திருக்குறள் சொன்னால் பெட்ரோல் இலவசம்! – கரூர் பெட்ரோல் பங்கில் குவியும் கூட்டம்!

நாடு முழுவதும் பெட்ரோல் விலை ஏற்றத்தால் மக்கள் அதிர்ச்சியில் உள்ள நிலையில் கரூர் தனியார் பெட்ரோல் பங்க் அறிவிப்பு ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

நாளுக்குநாள் அதிகரித்து வரும் பெட்ரோல் விலையால் மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். தொடர்ந்து விலையேற்றம் கண்டு வரும் பெட்ரோல் விலை தற்போது லிட்டர் 90 ரூபாயை எட்டியுள்ளது. இது விரைவில் 100 ரூபாயாக உயரக்கூடும் என பலர் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கரூரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் திருக்குறள் சொன்னால் பெட்ரோல் இலவசம் என் அறிவித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 10 திருக்குறள் சொன்னால் அரை லிட்டர் பெட்ரோலும், 20 திருக்குறள் சொன்னால் ஒரு லிட்டர் பெட்ரோலும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பலர் திருக்குறள் சொல்லி பெட்ரோலை பெற ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.