தொடர்புடைய செய்திகள்
- கன்னியாகுமரி வந்தார் பிரதமர் மோடி..! பகவதி அம்மன் கோவிலில் தரிசனம்..!!
- எந்த பிரதமரும் மோடியை போல பேசியதில்லை..! பிரதமர் பதவிக்குரிய மாண்பை சீர்குலைத்துவிட்டார்..! மன்மோகன் சிங்...
- மோடியின் தியானத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பக் கூடாது..! மீறினால் புகார் அளிப்பேன் என மம்தா எச்சரிக்கை..!
- பிரதமர் மோடி வருகை முதல் கனமழை எச்சரிக்கை வரை..! இன்றைய முக்கிய செய்திகள் (30.05.2024)
- எல்.முருகன், அண்ணாமலைக்கு குமரியில் புக் செய்த அறைகள் ரத்து: பாஜக தலைமை அதிரடி உத்தரவு..!
கன்னியாகுமரி காவி உடை.. சூரிய தரிசன வழிபாடு செய்தார் பிரதமர் மோடி..!
pm modi1
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் காவி உடையில் பிரதமர் மோடி சூரிய தரிசன வழிபாடு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விவேகானந்தர் பாறைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்திற்கு இன்று காலை 7.30 மணி அளவில் முதல் படகு புறப்படுகிறது என்றும், மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சுற்றுலா பயணிகளை சோதனை செய்த பின் அனுமதிக்கப்படுவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய இருப்பதை அடுத்து கன்னியாகுமரி முழுவதும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பாக குமரி கடல் கடலோர காவல் படையின் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் படகு போக்குவரத்து கழகத்திலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதும் விவேகானந்தர் மண்டபம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றும் இன்றும் தியானம் செய்யும் பிரதமர் மோடி அவர்களை சந்திக்க கட்சியினர் யாரும் வரக்கூடாது என்றும் கன்னியாகுமரியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் மட்டும் காவல்துறைக்கு வழிகாட்டலாம் என்றும் பாஜக தலைமை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
