1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 30 ஜனவரி 2024 (13:47 IST)

விஜயகாந்த் வீட்டில் கனிமொழி, ராஜாத்தி அம்மாள்..! பிரேமலதாவிற்கு ஆறுதல்.!!

kanimozhi
திமுக எம்பி கனிமொழி, திருமதி ராஜாத்தி அம்மாள் ஆகியோர் மறைந்த விஜயகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.
 
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள், கடந்த மாதம் 28ஆம் தேதி உடல்நல குறைவால் காலமானார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 
 
மறைந்த விஜயகாந்தின் நினைவிடத்தில், அரசியல் பிரமுகர்களும், திரைத்துறையினரும், தேமுதிக தொண்டர்களும், பொதுமக்களும் என ஏராளமானோர் நாள்தோறும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 
இந்த நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அவரது தாயார் திருமதி.ராஜாத்தி அம்மாள் ஆகியோர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டிற்கு நேரில் சென்றனர். அங்கு விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை  செலுத்திய அவர்கள்,  திருமதி.பிரேமலதா விஜயகாந்த்திற்கு ஆறுதலும்  தெரிவித்தனர்.