1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (11:04 IST)

ஒரே மழையில் 100% நிரம்பிய காஞ்சிபுரத்தின் 183 ஏரிகள்: பொதுப்பணித்துறை தகவல்!

lake
மாண்டஸ் புயல் காரணமாக ஒரே மழையில் காஞ்சிபுரத்தில் உள்ள 183 ஏரிகள் 100% நிரம்பி விட்டதாக பொதுப்பணித் துறை அறிவித்துள்ளது. 
 
மாண்டஸ் புயலால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்தது என்பதும் குறிப்பாக சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள 183 ஏரிகளும் 100% நிரம்பி உள்ளதாகவும் 111 ஏர்ரிகள் 75% நிரம்பி உள்ளதாகவும் பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 220 ஏரிகள் 100% நிரம்பி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva