1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 11 ஜூலை 2020 (15:41 IST)

கடைக்கண் பார்வை கிராமங்கள் மீதும் விழட்டும்: கமல்!

கிராமங்களின் கொரோனா குறித்த விழிப்புணர்வை என கமல் கோரியுள்ளார். 

 
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. சென்னையைக் கடந்து தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கிராமங்களின் கொரோனா குறித்த விழிப்புணர்வை என கமல் கோரியுள்ளார். 
 
இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது. போதுமான வசதிகள் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்கள், நவீன மருத்துவ வசதிகளுக்கு நகரங்களை நோக்கி பயணப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கிராமங்களில் இத்தொற்றின் பரவல் கவலையளிக்கிறது. வருமுன் தடுத்திட அரசு செயல்பட வேண்டும். வந்த பின் கட்டுப்படுத்துவோம் என்ற எண்ணம் ஆபத்தானது.