தொடர்புடைய செய்திகள்
- மதுரை சித்திரை திருவிழா: கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்..!
- தாயுமானசுவாமி கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்!
- மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா தேரோட்டம்.. பக்தர்களின் 'ஹர ஹர சிவா' முழக்கம்
- கள்ளழகர் இறங்கும் நிகழ்விற்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!
- கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு.. வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு..!
பச்சை பட்டுடுத்தி தங்க குதிரையில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்! பக்தர்கள் கோவிந்தா கோஷம்..!
உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று நிகழ்ந்த நிலையில் பக்தர்கள் ஏராளமான ஒரு குவிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வைகை ஆற்றில் இன்று பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரையில் கள்ளழகர் இறங்கியபோது கோவிந்தா என்ற கோஷம் விண்ணை பிளந்தது என்றும் ஏராளமான பக்தர்கள் இந்த வைபவத்தை கண்டு ரசித்து அழகரின் அருளை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் என்று நிகழ்வதை அடுத்து பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சித்ரா பௌர்ணமி அன்று நிகழும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் சரியாக இன்று காலை 6.04 மணிக்கு நடைபெற்றது என்பதும் இந்த கண்கொள்ளாக் காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் பார்த்து பார்த்தனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது
மேலும் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் போது பக்தர்கள் தண்ணீர் பீச்சி அடித்து தங்கள் நேர்த்திகடனை செலுத்தும் நிகழ்வு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva
