தொடர்புடைய செய்திகள்
- டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மது விற்றால் டிஸ்மிஸ்: அமைச்சர் எச்சரிக்கை
- மின்வெட்டு குறித்து ட்விட் போட்ட பிசி ஸ்ரீராம்.. உடனடியாக பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு..!
- அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை: காவேரி மருத்துவமனை முக்கிய தகவல்..!
- செந்தில்பாலாஜி மனைவி மேகலா கூடுதல் மனு தாக்கல்.. அண்ணாமலை குறித்து குற்றச்சாட்டு..!
- ஐசியுவில் இருந்து தனி அறைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மாற்றம்
அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க கூடாது என்ற வழக்கு: நீதிபதி சரமாரி கேள்வி..!
அமைச்சராக செந்தில் பாலாஜி நீட்டிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில் நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.
அமைத்து செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநர் ரவி எங்கே கூறினார் என மனுதாரருக்கு கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கில் அரசியல் சாசன அமைப்பின்படி தான் நாங்கள் செயல்பட முடியும் என்று தெரிவித்தார்.
மேலும் இந்த வழக்கை பிற்பகலுக்கு தள்ளி வைக்கப் வைக்கப்படுவதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்க செய்ய வேண்டும் என முதலமைச்சருக்கு ஆளுனர் கடிதம் எழுதினாரா? அப்படி கடிதம் எழுதியிருந்தால் அந்த கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி மனுதாரருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை தமிழ்நாடு அரசு நியமித்ததை எதிர்த்து வழக்கறிஞர் எம்எல் ரவி என்பவர் வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran
