சசிகலா அணியுடன் எடப்பாடி இணக்கம்?: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (15:52 IST)
சசிகலா அணியுடன் இணக்கமாக செல்ல எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.
 
பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
இது குறித்து கருத்து தெரிவித்த அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரிடம், டிடிவி தினகரனைத் தவிர்த்து சசிகலா அணியில் உள்ள மற்றவர்களிடம் தமிழக அரசு இணக்கமாகச் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், இது முழுக்க முழுக்கத் தவறான செய்தி. எந்தக் காலத்திலும் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டோம் என கூறினார்.

எல்லாம் காட்டு

வெப்ப அலையிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி?.. சுகாதார மையம் கூறிய நெறிமுறைகள்!..

20 எம்.எல்.ஏக்கள் மட்டுமே பங்கேற்பு!. மம்தா பேனர்ஜு கூடாரம் காலியாகிவிட்டதா?..

ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து!. புதுமண ஜோடிக்கு நேர்ந்த சோகம்!...

இப்பதான் சி.எம். ஆயிட்டீங்களே!. கண்டுபிடிச்சி சொல்லுங்க!.. விஜயை லாக் பண்ணும் அமீர்!..

மனசு கஷ்டமா இருக்கு!.. அதிமுக ஒன்னு சேரணும்!.. அதிமுக நிர்வாகி தற்கொலை!..

அடுத்த கட்டுரையில்
Show comments