ஸ்டெர்லைட் ஆலை நடத்த லஞ்சம் வாங்கியதாக ஆதாரம் இல்லாமல் பொன்.ராதாகிருஷ்ணன் பேசக்கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் இன்று பேட்டியளித்தார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என பொதுமக்கள் பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆட்சியில் இருந்த போதுதான் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதை எதிர்த்து நான்...