1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 19 நவம்பர் 2018 (09:14 IST)

1955 ல தான் சுதந்திரம் கிடைச்சது: மாஸ் காட்டிய செல்லூர் ராஜு

அமைச்சர் செல்லூர் ராஜூ இந்தியாவிற்கு சுந்ததிரம் கிடைத்தது 1955ல் என கூறியது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சர்ச்சைக் கருத்தைக் கூறுவதிலும், சர்ச்சையான செயல்களை செய்து சிக்கிலில் சிக்குவதை அதிமுகவினர் பலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த பட்டியலில் எல்லோருக்கும் குருவாக இருப்பவர் தான் அமைச்சர் செல்லூர் ராஜூ. இவரின் தெர்மாகோல் கண்டுபிடிப்பு ஊர் அறிந்த விஷயம்.
 
இந்த வகையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, அம்மா அரசு அந்த சாதனைகளை செய்தது, அம்மா அரசு இந்த சாதனைகளை செய்தது என பேசிக்கொண்டிருந்தார்.
 
அப்பொழுது ஆர்வ மிகுதியில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது 1947க்கு பதில் 1955 என கூறிவிட்டார். ஒரு அமைச்சருக்கு இந்தியா சுதந்திரம் அடைந்தது எப்பொழுது என்று கூட தெரியாதா என அங்கிருந்தவர்கள் முணுமுணுத்துக் கொண்டனர்.