வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (15:13 IST)

மனைவிக்கு சிலை வைத்து வணங்கும் கணவர் !

இந்த  உலகில் ஒரு ஆணுக்குத்  தாய்க்குத் தாயாகவும், தாரமாகவும் தோழியாகவும் இருக்கும் பெண் மனைவி என்ற பாத்திரத்தை ஏற்று குடும்பத்தைப் பொறுப்புடன் நிர்வகிக்கிறார்.

அவர் இல்லாத நிலையில் அக்குடும்பத்தின் நிலையை எண்ணிப் பார்ப்பதே இயலாத ஒன்றாகும்.

அந்தவகையில் தமிழகத்தில் உள்ள பிரபல தொழிலதிபர் சேதுராமன் தனது மனைவி இறந்துவிட்ட நிலையில் அவரது நினைவாக அவர் உருவச் சிலையை வீட்டில் நிர்மாணித்துள்ளார்..

நிஜமாக அவர் உள்ளதைப் போன்றிருக்கும் இந்த ஆறடி சிலை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டதாகும்.