1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: புதன், 18 செப்டம்பர் 2019 (19:41 IST)

இரும்புக் கடையில் பணத்தை கொள்ளையடித்த கணவன், மனைவி - வைரலாகும் வீ டியோ

திருச்சி மாவட்டம் மணபாறை அருகேயுள்ள இரும்புக் கடையில் பணத்தை கொள்ளையடித்துச் என்ற கணவன். மனைவியை போலீஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பிரபல இரும்புக் கடையை நடத்திவருபவர் பர்ஷத் அலி. இவரது கடைக்கு நேற்று துருக்கி நாட்டைச் சேர்ந்த தம்பதியர் வந்துள்ளனர். கடையில் சில பொருட்களை வாங்கிவிட்டு, அதற்கு ரூ. 2000 பணத்தாளைக் கொடுத்துள்ளனர். 
அப்போது, கடையில் இருந்த ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி, கபா பெட்டியில் இருந்த ரூ. 17 ஆயிரத்தை கண் இமைக்கும் நேரத்தில் திருடிச் சென்றனர். இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவு கேமாவில் பதிவாகியிருந்தது.
பின்னர், கடையில் பணத்தைக் காணாவில்லை என கடை உரிமையாளர், காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் போலீஸார் சிசிவிடி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, வெளிநாட்டைச் சேர்ந்த திருட்டு தம்பதிகளைத் தேடி வருகின்றனர்.