1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (19:24 IST)

கணவரால் பிரச்சனை ஏற்பட்டால் அவரை வீட்டை விட்டு வெளியேற்றலாம்: நீதிமன்றம் உத்தரவு

court
கணவரால் அடிக்கடி வீட்டில் பிரச்சனை ஏற்பட்டால் மனைவி அவரை வீட்டை விட்டு வெளியேற்றலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கணவரால் அடிக்கடி வீட்டில் பிரச்சனை ஏற்படும் போது அவரை வெளியேற்றினால் தான் அமைதி நிலவும் என்றால் அதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது 
 
விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்போது கணவர் வீட்டை விட்டு வெளியேற கேட்டு மனைவி மனு தாக்கல் செய்த நிலையில் குடும்ப நல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சென்னை ஐகோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உத்தரவு காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது