1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 1 டிசம்பர் 2023 (13:19 IST)

மசோதா எவ்வாறு குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும்? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி

சட்டப்பேரவைக்கு திரும்ப அனுப்பட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற அனுப்பினால் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரமில்லையே என்று  உச்ச   நீதிமன்ற  நீதிபதி தெரிவித்துள்ளார்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்துவிட்டு அதனை மீண்டும் சட்டமன்றத்துக்கு அனுப்பிவிட்டு அது மறு நிறைவேற்றம் செய்த பின்னர் அந்த மசோதா எவ்வாறு குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும்? என்று மத்திய அரசு தலைமை வழக்கறிஞருக்கு தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில், ஆளுராக ஆர்.என்.ரவி உள்ளார்.
 
தமிழக ஆளுனருக்கு எதிராக சமீபத்தில் மனு தாக்கல் செய்தது. இதுகுறித்து சமீபத்தில் உச்ச  நீதிமன்றம் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்திருந்தது.
 
இந்த  நிலையில், ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் தொடங்கியது.
 
அப்போது, ஆளுனர் தரப்பில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டது என கூறப்பட்டபோது அது தொடர்பாக கோப்புகள் சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பப்பட்டதா ? என்று கேள்வி எழுப்பினார்.
 
சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
 
மேலும், சட்டப்பேரவைக்கு திரும்ப அனுப்பட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற அனுப்பினால் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரமில்லையே என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், முதன்முறை மசோதா ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட போதே குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கலாம். ஆனால்,  மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்துவிட்டு அதனை மீண்டும் சட்டமன்றத்துக்கு அனுப்பிவிட்டு அது மறு நிறைவேற்றம் செய்த பின்னர் அந்த மசோதா எவ்வாறு குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும்? என்று மத்திய அரசு தலைமை வழக்கறிஞருக்கு தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.