ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 3 ஜனவரி 2022 (17:47 IST)

ஜனவரி 31 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடல் - மும்பை மாநகராட்சி

தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு  நாடுகளுக்கு  ஒமிக்ரான் தொற்றுப் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஏற்கனவே கொரொனா இரண்டாவதுஅலை பரவி வரும் நிலையில் ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது.   

இதைத் தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு  நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில் கொரொனாவால் மும்பையில் உள்ள பள்ளிகள் மூடப்படுவதாக மும்பை  மா  நகராட்சி அறிவித்துள்ளது.

அதில், மும்பையில் ஜனவரி 31 ஆம் தேதி  வரை 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடந்து செயல்படும் என தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கோவா மாநிலத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மூட அம்மா நில அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.