1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 17 அக்டோபர் 2019 (10:43 IST)

5 நாட்களுக்கு, 5 ஸ்டேட்டை ரவுண்டு கட்டும் மழை!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. 
 
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
 
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆம், தென் மேற்கு வங்கக்கடல் - தென் தமிழகத்தை ஓட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறதாம். 
 
எனவே, தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும், தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.