சனி, 21 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva

அடுத்த 3 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்? வானிலை எச்சரிக்கை

rain
அடுத்த மூன்று மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் இன்று மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் மாவட்டங்கள் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்ட மாவட்டங்கள் பின்வருமாறு:
 
 திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்
 
Edited by Siva