1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 22 அக்டோபர் 2022 (14:57 IST)

இன்னும் சில மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை: வானிலை அறிவிப்பு

rain
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாகவும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மையம் நகர்ந்து வருவதால் இந்த காற்றழுத்த தாழ்வு மையம் 24ஆம் தேதி புயலாக மாறும் என்றும் 25ஆம் தேதி கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இன்னும் சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் அதாவது நீலகிரி, ஈரோடு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
அதேபோல் அக்டோபர் 23, 24, 25, 26 ஆகிய நாட்களும் நல்ல மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran