1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 13 டிசம்பர் 2022 (07:59 IST)

இன்னும் ஒரு மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு

rain
இன்னும் ஒரு மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது 
 
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், விழுப்புரம்,பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாமக்கல், புதுக்கோட்டை  ஆகிய 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என வானிலை அறிவிப்பு வெளியாகி உள்ளது
 
எனவே மேற்கண்ட ஒன்பது மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
 
Edited by Siva