1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 16 நவம்பர் 2023 (07:37 IST)

சென்னை 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகிய காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகள் நிரம்பி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் மழையின் பாதிப்பை சரி செய்ய அனைத்து மாவட்ட நிர்வாகங்கள்  இரவு பகல் பாராமல் தீவிர பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இன்னும் மூன்று மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே மேற்கண்ட நான்கு மாவட்டத்தில் உள்ள நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Siva