1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 15 நவம்பர் 2023 (17:21 IST)

இன்று இரவு 12 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..!

Rain
இன்று இரவு 12 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக  மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில்  இன்று இரவு தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருவள்ளூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், தென்காசி, திருநெல்வேலி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மற்றும் மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்களிலும் புதுச்சேரியில் உள்ள சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  

இதனை அடுத்து மேற்கண்ட 12 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம்  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Mahendran