தொடர்புடைய செய்திகள்
- பார்க்கிங் இடம் இல்லையென்றால் கார் வாங்க முடியாது: வருகிறது புதிய சட்டம்..!
- தமிழ் பெயர் பலகை இல்லா கடைகள்! உரிமத்தை ரத்து செய்ய முடிவு? - சென்னை மாநகராட்சி அதிரடி!
- குடும்பத்தை அழைச்சிட்டு வரக் கூடாது.. ஸ்லீவ்லெஸ் போடக் கூடாது! - ஐபிஎல் வீரர்களுக்கு கடுமையான விதிமுறைகள்?
- சென்னை மாநகராட்சியில் 6 புதிய மண்டலங்கள்.. உங்கள் பகுதி இருக்கிறதா என பாருங்கள்..!
- சென்னையின் 5 கடற்கரையின் தூய்மை பணிகள்: தனியாருக்கு விட முடிவு..!
வளர்ப்பு நாய்களுக்கு வாய்ப்பூட்டு! இல்லாவிட்டால் அபராதம்! - சென்னை மாநகராட்சி அதிரடி முடிவு!
தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் நாய்கள் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் வளர்ப்பு பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு சென்னை மாநகராட்சி புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
சமீபமாக வளர்ப்பு நாய்களை வெளியே அழைத்து செல்லும்போது அவை மக்களை தாக்கிய சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அதுபோல தெருநாய்கள் பெருகிவிட்டதால் அவை கூட்டமாக சேர்ந்து தனியாக செல்வோரை தாக்குவதும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி என பல பகுதிகளிலும் அரசு செயல்படுத்தி வருகிறது. அதுபோல சென்னையில் வளர்ப்பு நாய்களை வெளியே அழைத்து செல்லும்போது அவற்றிற்கு வாய்மூடி அணிவிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வளர்ப்பு நாய்களை வாய்மூடி போடாமல் வெளியே அழைத்துச் சென்றால் ரூ.1000 அல்லது அதற்கு மேல் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K
