1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 19 மே 2022 (07:59 IST)

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம்: 5 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை!

Flood
தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களுக்கு வெள்ள பெருக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வரும் நிலையில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
 
தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்ததன் காரணமாக கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதாகவும் அதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனையடுத்து தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாறிக் கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.